Wednesday 30 April 2014

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ?

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல
இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள்
எப்படி வந்தன என்று தெரியுமா ?

தொடர்ந்து படியுங்கள் :

சென்னை: -

சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட
பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும்
10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய
கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர்
ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப்
பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம்
சென்னையாகி விட்டது.

மதராஸ் :-

முகமதியர்கள் பலர்
இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால்,
மதராஸே என்று அழைக்கப்பட்டது பின்
நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் -

கோடா பாக் : குதிரைகளும்
அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய்
இருந்த இடம் இன்று கோடம்பாக்கம்
ஆகிவிட்டது.

மாம்பலம்:

மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர்
தங்கியிருந்த இடம்
இன்று மாம்பலமாகி விட்டது
மற்றொரு பெயர் காரணம்.

மா அம்பலம் :-
ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம்
இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம்
அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப்
பட்டதாம்.
இன்றைய கிருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில்
மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் :

சதயு எனும் மன்னன் 108
சிவாலயங்களை எழுப்பினான். அதில்
108வது சிவாலயம் சதயுபுரத்தில்
இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம்
கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:-

ப்ருங்கி முனிவர் தன்னுடைய
தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப்
பொருத்திய இடம்
இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:-

ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம்
இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச்
சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய
கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச்
சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு:

மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான
மண்ணை இந்த பகுதியில் சேறு போல்
குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச்
செல்வார்களாம். சேறு குழைத்த இடம்
சேற்றுப்பட்டு.

எழுமூர்:

இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும்
முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல்
தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர்
இன்று எழும்பூராகிவிட்டது.
இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள
சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர்
என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத்
தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்:

பல்லவ மன்னனின் அமைச்சரவையில்
இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட
மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை:

சின்ன தறிப் பேட்டை :
சிறிய அளவிலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான
துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை :

பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின்
கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன்
பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான்
குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட
மான்யம் தொண்டையார்
புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்:

புரசைப் பாக்கம்:
புரசுக் காடுகள் மண்டியிருந்த
பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை:

அமைந்தகரை அமர்ந்தகரை:
ராமபிரான் (லவகுசர்களிடம்
போரிட்டு வெற்றி காண முடியாமல்)
அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு:

செங்கழுநீர் பட்டு :
செங்கழுநீர் பூக்கள் நிறைந்த
குளங்களை நிறைய கொண்ட இடம்
இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர் :

பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய
பூமி இன்று பெரிய குளத்தூர்
இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்:

பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய
சமணப்பள்ளிகள் உள்ள இடம்.
அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பரங்கிமலை:-

பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர்.
St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர்
வசித்ததனால், அது பரங்கிமலையாக
வழங்கியிருக்க வேண்டும். மற்றோர்
உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo -
போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர்
அருகிலுள்ளது.

பூந்தமல்லி :

பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம்
கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த
இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்:

நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள்
ராமனை வரவேற்ற இடம்
இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்:

ராமபிரான் தங்கிய
மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்:

முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்
கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.

குன்றத்தூர்:

குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய்
பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல்
டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்:

அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய
சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்:

பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட்
இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்:-

மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம்
இருந்த இடம் இன்று நந்தனம்.
இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட
நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி :

திருக்குடை வைபவத்தில் எம்பெருமான்
யானை போல் ஒடி தாண்டினாராம்.
ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவாயில் யானகவுணி.

மாதவரம்:

மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம்
இன்று மாதவரம். புராதன சிவ்-
விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

வளசரவாக்கம்:

வள்ளி சேர் பாக்கம்:
முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம்.
இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில்
கட்டியிருக்கிறார்கள்.

எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல் :

ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்
இங்கே ராத்தங்கலுக்கு வருவார்.
எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும்
காட்டிற்கு நடுவே எம்பெருமானின்
சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர் :
மகப்பேர் ஸந்தானபுரி.

முகலிவாக்கம் :

கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த
இடம் மௌளிவாக்கம்
இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்:

அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த
சிவன்) வரம் பெற்ற இடம்.

யப்பா!! என்னங்க?? வரலாற்றை படிக்கும் போது ஆச்சர்யமா இருக்கா???

உங்களுக்கும் தெரிந்த ஊர்களுடைய பெயர்கள் இருந்தால் பகிரவும்

உங்கள் பொறுமைக்கு நன்றி